Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 18, 2020

சிறப்பாசிரியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளன.


எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்குவோம். கரோனா வைரஸ் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். சனிக்கிழமைகளில் கல்வித் தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment