Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 23, 2020

பணியில் இருப்பவர்கள் எம்.பி.ஏ படிக்கலாம்... சென்னை ஐஐடியில் வாய்ப்பு

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிலையத்தின் மேலாண்மைத் துறை எக்சிகியூட்டிவ் எம்பிஏ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் கொண்ட பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது இரண்டு ஆண்டு படிப்பு. இந்தப் படிப்பைப் படித்து முடிப்பவர்களுக்கு ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படும். வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும்.

எக்சிகியூட்டிவ் எம்பிஏவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில படிப்புகள் மற்றும் புராஜெக்ட்டுகள் இடம்பெறும். ஐஐடியின் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து வசதிகளையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை ஐஐடியின் பிரத்யேக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 14.9.2020
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 18.10.2020
எம்பிஏ வகுப்புகள் தொடக்கம் : டிசம்பர் 2020
தொடர்புக்கு: 98405 72328, 044 2257 5558
விவரங்களுக்கு: www.doms.iitm.ac.in/emba

No comments:

Post a Comment