Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 29, 2020

மாறுதல் ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களை புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய அனுமதி வழங்கி கல்வித்துறை உத்தரவு.

2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளின்படி 2019 ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பணியிட மாறுதல் ஆணை பெற்று இதுநாள் வரையில் பணியிலிருந்து விடுவிக்கப்படாத ஈராசிரியர் பணிகளில் பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அவரவர் மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர்ந்து பணிபுரிய உரிய ஆணை வழங்க அரசுக் கடிதத்தின்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 2019 ஜீன் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வின்போது மாறுதல் ஆணை பெற்றுள்ள ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் காரணத்தினால் பணி விடுவிக்கப்படாமல் உள்ள 487 இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிக்கவும் அவரவர் மாறுதல் ஆணை பெற்றுள்ள புதிய பள்ளிகளில் சேர்ந்து பணிபுரியவும் அனுமதி வழங்கி உத்தரவிடப்படுகிறது.

மேற்காண் ஆசிரியர்கள் பணிவிடுப்பு செய்யப்படும் போது பின்வரும் நடைமுறைகள் தவறாது பின்பற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment