எட்டுத்தொகை நூல்களுள் அகநூலாக அமையும் பெருமை உடையது அகநானூறு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளில் நானூறு பாக்களைக் கொண்டிருக்கிறது.
நூலைத் தொகுத்தவர் உப்பூரிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.
நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.
1 முதல் 120 வரை உள்ள களிற்றியானை நிரைப் பாடல்கள் நிமிர்ந்து நடந்து செல்லும் களிற்றின் பெருமித நடை உடையன. களிற்றியானை நிரைக்கு புலியூர்க் கேசிகன் எளிமையான உரை வழங்கியுள்ளார்.
PART 1 PDF: CLICK DOWNLOAD
PART 2 PDF: CLICK DOWNLOAD
PART 3 PDF: CLICK DOWNLOAD
No comments:
Post a Comment