Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 1, 2020

ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு சேர காலக் கெடு நீட்டிப்பு

ராணுவ கல்லுாரியில் 8ம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்கள் மட்டும் நேற்று (30ம் தேதி) தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் காலகட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக காலக்கெடு வரும் நவம்பர் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு எழுதும் மாணவருக்கு 1.7.-2021 அன்று பதினொன்றரை வயதுக்குக் குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். 1.7.-2021-ல் இக்கல்லுாரியில் சேரும்பொழுது ஏழாம் வகுப்பு பயில்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 

மாணவர்களுக்கான நுழைவு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பப் படிவத்தை பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் பெற்றிட, தெளிவான அஞ்சல் குறியீட்டு எண் உள்ள விலாசம் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றுடன் கூடிய கோரிக்கை மனுவுடன், பொதுப்பிரிவினர் (ரூ.600/- விரைவு அஞ்சல்), அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் அதற்குண்டான சாதி சான்றிதழுடன் (ரூ.555/- விரைவு அஞ்சல்) தொகையை 'THECOMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN, DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (BANK CODE- 01576), UTTARAKHAND" என்ற கிளையில் மாற்றத்தக்க கேட்பு வரைவோலையாக, THE COMMANDANT, RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, DEHRADUN CANTONMENT, UTTARANCHAL -248 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது www.rimc.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக பொதுப்பிரிவினர் ரூ.600ம் மற்றும் அட்டவணை இனத்தவர், பழங்குடியினர் ரூ.555 ம் தொகையை செலுத்தினால் விண்ணப்பப் படிவம் தாங்கள் முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், இணை இயக்குநர், இரண்டாம் தளம், அ- அடுக்ககம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுச்சேரி-605 005 முகவரிக்கு வரும் 30-11-2020 க்குள் வந்துசேர வேண்டும்.இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment