நல்ல பேச்சுவன்மையும் சிறந்த எண்ணமும் கொண்ட மிதுனராசிஅன்பர்களே..
நீங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பீர்கள். ஆச்சாரங்களை கடைபிடித்து வருவீர்கள். தெய்வ நம்பிக்கை உடைய நீங்கள் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கண்ணியமும் உடையவர்கள். சொந்த திறமையால் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள்.
பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடுமனை வாங்கி இருப்பீர்கள் அல்லது வசதியான வீட்டிற்கு குடி புகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்தநிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மனவேதனையும், நிலையற்றதன்மையும் கொடுப்பார்.
பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள்அஞ்சவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது7-ம் இடத்து பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.
அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்றநிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்பராசியில் இருக்கிறார்.
இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும். அவர் 2021 நவம்பர் 13-ந்தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 9-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். அதன்பிறகு 2022ஏப்ரல் 14-ந்தேதிஅன்று பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான மீனராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார்.
மற்ற கிரகங்களின் நிலை
சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இதுசிறப்பானஇடம்அல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர்வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுற-லாம். அவர் 2020 டிசம்பர் 26-ந்தேதி அன்று மகரராசிக்கு பெயர்ச்சிஅடைகிறார்.
8- ம் இடமான அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தரமுடியும்?இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும். கேது இப்போது 6-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதன் மூலம் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும்.
மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வைசாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும். எடுத்த பொருளாதார வளம் மேம்படும்.கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலனை தர இயலாது. அவர் 12-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இங்கு அவர் பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.
இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்-களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
இனி விரிவான பலனை காணலாம்.
செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கிய காரியங்களை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும்.
உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதிவரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிநிலவும், கணவன்மனைவி இடையே இருந்து வந்த ஊடல் மறையும். காரிய அனுகூலம் ஏற்படும். உற்சாகம் பிறக்கும். அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் வீட்டுக்கு தேவையான சகலவசதிகளையும் பெருவீர். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர்.
உத்தியோகம் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்ககளுக்கு முயற்சியில்தடை ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டுபிரியலாம்.போலீஸ், ராணுவத்தில்பணிபுரிபவர்கள்உயர்ந்தநிலையைஅடைவர்.
2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர்14-ந்தேதிவரை தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும்.வேலைபளு குறையும். விருப்பமானஇடமாற்றத்தைமுயற்சிசெய்துபெற்றுவிடவும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
புதிய பதவி தேடி வரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சம்பள உயர்வு வரும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்பணியில்இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். வியாபாரம் லாபம் அதிகரிக அதிகமாகஉழைக்க வேண்டியதிருக்கும். எதிலும்அதிக முதலீடுபோடவேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணலாம்.
சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். ஆனாலும்குருவின் பார்வைபலத்தால் அவைஅனைத்தையும் முறிடிக்கும் வல்லமைகிடைக்கும். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.
லாபம் அதிகரிக்கும். பணவரவுக்கு பஞ்சம்இருக்காது. குருவால் வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அரசுவகையில் அனுகூலம் காணப்படுகிறது.
வளர்ச்சிஇருக்கும்.பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும் .பங்குவர்த்தகம் நல்லலாபத்தை தரும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்லவளத்தைக்காணலாம்
.கலைஞர்கள்
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிரு-க்கும். அரசியல் வாதிகள்செல்வாக்கு பெறுவர். காரியத்தடை,பொருள்நஷ்டம், அவப்பெயர் முதலியன மறையும். முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனையாக இருப்பர். 2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021செப்டம்பர் 14-ந்தேதி வரை மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதியஒப்பந்தங்கள்கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதியபதவிதேடிவரும்
மாணவர்கள்
மாணவர்கள் முயற்சிஎ டுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன்உள்ளதாகஅமையும்.
விவசாயம்
விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சிலர்முயற்சி எடுத்து புதிய சொத்துவாங்குவீர்கள். கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.2021 ஏப்ரல் 4-ந்தேதிமுதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவரிடம்விட்டுக்கொடுத்துப்போகவும்.வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.
பெண்காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. 2021 ஏப்ரல் 4-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சி-களில்கலந்துகொள்வர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்தவீட்டில் இருந்து உதவிகள் வரும்.
அண்டைவீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உடல்நலம் சிறப்பாகஇருக்கும். சிலர்மன உழைச்சலுடன் காணப்படுவர்
பரிகாரம்
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலைஅணிவித்து வழிபாடு நடத்துங்கள்.அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை அம்மனுக்குஎலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுங்கள்.
கணித்தவர்: காழியூர் நாராயணன்
No comments:
Post a Comment