Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 16, 2020

மீன ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே!

நீங்கள் எந்த பிரச்சினையிலும் சிக்க மாட்டீர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வல்லமை படைத்தவர்கள். உங்ளுடைய கண்களுக்கு அபார சக்தி உண்டு. இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசியில்இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்துகொண்டிருந்தார் அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார்.

சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான மகர ராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.அவர் 2021நவம்பர் 13-ந் தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார்.

இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும் அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை. அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவர் உங்களுக்கு கெடுபலன்கள் அதிகம் செய்யமாட்டார்.

காரணம் உங்கள் ராசியான மீனம் அவருக்கு சொந்த வீடு. சொந்த வீட்டில் இருந்து கொண்டு கெடுபலன்களை செய்ய எப்படி மனம் வரும். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் தற்போது 10-ம் இடத்தில் உள்ளார். இதனால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோக செய்யலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.காரணம் அவர்2020 டிசம்பர் 26-ந் தேதி அன்று 11-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். இப்போது ராகு 3-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.அவர் காரியஅனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் கொடுப்பார்.

கேது இப்போது 9-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். கேதுவால் பொருள் இழப்பையும், தோல்வியையும் காணலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
இனி விரிவான பலனை காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.

எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். குருவால் உங்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம், மனதில் தளர்ச்சி,வீண் மனக்கவலை முதலியன மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர்.

தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு வாங்குவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர்.

உத்தியோகம்அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந்தேதி வரை வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.

உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.வழக்கமான பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும்.

கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.உங்கள் ஆற்றல் மேம்படும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். குடும்ப பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள்.

அது சிறப்பாக முடியும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக்கொள்ள வேண்டாம் கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர்.சமூகத்தில் நல்ல அந்தஸ்க்கு உயர்த் -தப்படுவர். சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

புகழ்,பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை புதிய ஒப்பந்தங்கள்பெற சற்றுமுயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர். மாணவர்கள் வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும்.

குருவால் ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு பாசிபயறு,நெல்,எள்,உளுந்து, கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக்கடலை நல்ல வருவாயை கொடுக்கும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர்.வழக்கு விவகாரங்கள்சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.

2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14- ந் தேதி வரை கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும் பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குடும்பபெரியோர்களாலும் உறவினர்களாலும் பல்வேறு அனுகூலத்தை பெறுவர்.

சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண் -களுக்கு குரு உயர்வை தருவார். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது கவனம் தேவை

பரிகாரம்: வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும்.ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்

No comments:

Post a Comment