Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 25, 2020

3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை !

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நிவர் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் நாளை முதல் அதாவது 26-ம் தேதி முதல், 28 -ம் தேதி வரை 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனையடுத்து அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை நாளை முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment