Breaking

Saturday, November 14, 2020

டிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட உதவியாளர்

வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.20,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.csio.res.in என்ற இணையதளம் மூலம் 18.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி : 18.11.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.csio.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment