Breaking

Sunday, November 15, 2020

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா?

தமிழகத்தில் கல்வித் துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ கத்தில் மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது . பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . கடந்த 8 மாதங்களாக பள்ளி , கல்லூரிகள் திறக் கப்படவில்லை . இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகள் நவ . 16 ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது . 

இதையொட்டி பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத் துக் கேட்பு கூட்டங்களில் பள்ளி திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . நவம்பர் , டிசம்பர் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது அப்படி திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் . பள்ளிகளைத் திறப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது என்றும் , கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்பு பள்ளி , கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும் பெற்றோர் , அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர் . 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண் ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது . சமீபத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது . இப்பி ரச்னை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன் , பி.புகழேந்தி ஆகியோர் , “ கொரோனாவால் தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதையெல் லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கலாமே " என்று கேள்வி எழுப்பியிருந்தது . இதன் தொடர்ச்சியாக , நவ . 16 ம் தேதி பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமி ழக அரசு நேற்று ரத்து செய்துள்ளது . 

அத்துடன் , அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் , முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி , பல்க லைக்கழகங்கள் டிச . 2 ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது . தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படா விட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன .

No comments:

Post a Comment