Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 25, 2020

ஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்க பூஜ்ஜியம் கட்டாயம்

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள பூஜ்யம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ' லேண்ட்லைனிலிருந்து செல்போன்களுக்கு அழைக்கும்போது, மொபைல்போன் எண்களுக்கு முன்பு பூஜ்ஜியம் சேர்ப்பது அவசியம் என்ற 29.05.2020 தேதியிட்ட டிராயின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து லேண்ட்லைன் போன் நிறுவனங்களும் இந்த சேவையை ஜனவரி முதல் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment