Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 6, 2020

அரசு ஒதுக்கீட்டு பணியிடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய கூடாது தலைமை செயலாளர் சண்முகம் எச்சரிக்கை.


அரசின் ஒதுக்கீட்டு பணியிடங்க ளில் தற்காலிக பணியா ளர்களை பணியமர்த்தக் கூடாது . விதிகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண் முகம் எச்சரிக்கை விடுத் துள்ளார் . தமிழகத்தில் பொதுப் பணி , நெடுஞ் சாலை , ஊரக வளர்ச்சி , வருவாய் , உள்ளாட்சி உள்ளிட்ட பல் வேறு துறைகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் . இவர்கள் , ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணி யாற்றி வரும் பட்சத்தில் அவர்கள் நிரந்த பணியா ளர்களாக பணியமர்த்தப் பட்டு வந்தனர் . குறிப்பாக , துப்புரவு பணியாளர் , காவ லர் , அலுவலக உதவியா ளர் , டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 10 ஆண்டுகள் முடித்த தற் காலிக பணியாளர்கள் நிய மிக்கப்படுகின்றனர் . ஆனால் , இது போன்ற நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . அந்த வழக்கை விசா ரித்த நீதிமன்றம் , உமாதேவி வழக்கை சுட்டி காட்டி வேலை வாய்ப்பு அலுவல கம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறை மூலம் விளம்பரம் கொடுத்து அரசு பணிக ளில் ரெகுலர் அடிப்படை யில் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று கடந்த 2017 ல் உத்தரவிட் டது . இதனால் , 10 ஆண் டுகளுக்கு மேலாக தினக் கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதில் சிக் கல் ஏற்பட்டது . மேலும் , அவர்கள் நிரந்தரம் செய்வ தற்கு பதிலாக பணி வரன் முறை செய்யப்பட்டு வரு கின்றனர்.இந்த நிலையில் அலுவலக உதவியாளர் டிரைவர் . தூய்மை பணி யாளர் பணியிடத்துக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க வேண்டியுள்ளது .



ஆனால் , இந்தபணியிடங்க ளுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத வர்கள் விண்ணப்பிப்ப தற்கு பதிலாக பிஇ , எம்இ படித்த பட்டதாரிகள் கூட விண்ணப்பிக்கின்ற னர் . குறிப்பாக , சமீபத்தில் பொதுப்பணித்துறையில் 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நிய மனம் மூலம் நியமிக்க விண்ணப்பங் கள் பெறப் பட்டது . ஆயிரத்துக் கும் மேற் பட்டோர் விண் ணப் பித் திருந்த னர் . இதில் , பிஎச்டி முடித்த வர்கள் , 89 எம்இ பிடித்தவர் கள் , 120 பிஇ படித்தவர்கள் இதில் , 4

உட்பட பலர் விண்ணப் பித்திருந்தனர் . இந்த பணி யிடங்க ளுக்கு அனைத்து விண் ணப்பங்களையும் பரிசீல னையில் எடுத்து கொள்ள வேண்டும் . ஆனால் , 4 ஆயிரத்துக் கும் மேற் பட்ட விண்ணப்பங்கள் வந்ததால் இந்த பணியி டங்களை நிரப்பவில்லை . இதேபோன்று பல்வேறு துறைகளில் கீழ் நிலை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடியாத நிலை உள்ளது .

இந்த நிலையில் , தமிழக அரசின் தலைமை செயலா ளர்சண்முகம் அரசின் இட ஒதுக் கீட்டு இடங்களில் தினக்கூலி ஊழியர்களை பணியமர்த்தக்கூடாது . இப்பணி யிடங்களுக்கு நேரடி நியமன அடிப்ப டையில் நியமிக்க வேண் டும் . மாறாக , தினக்கூலி பணியாளர்களை அந்த பணியிடங்களில் நியமனம் செய்தாலோ அல் லது நியமனம் செய்வது தொடர் பாக பரிந் துரை செய் தாலோ அந்த அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண் டும் என்று உத்தரவிட்டு அரசாணை வெளி யிட் டுள்ளார் .

No comments:

Post a Comment