தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் மற்றும் அவர்களது வாரிசு ஆகியோர் பயணம் மேற்கொள்ளும் வகையில் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்படஉள்ளது.
எனவே, வயது முதிர்வு காரணமாக, சம்பந்தப்பட்டவர்கல் தனியாக பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும், பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணச் சலுகை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 24.03.2020 அன்று போக்குவரத்துத் துறையின் மானியக் கோரிக்கையில், 60 வயதிற்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் உடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி துறையின் மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 60 வயதிற்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக் காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் அவர்தம் உதவியாளரின் விவரங்களை சமர்ப்பித்து அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
எனவே, அந்த அந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை அணுகி சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பயனடைய கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment