Subscribe Us

Wednesday, February 24, 2021

26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் வகுப்பு IV- ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் ( பணி விதிகள் ) சட்டம் 2016 , பிரிவு 47 ( 1 ) ன் படி தற்காலிக அடிப்படையில் , அவர்கள் பணி ஏற்கும் நாள் முதல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் , மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு , தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி 2 ( c ) III- ன் கீழ் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் உள்ள பதவிகளுக்கு பணி மாறுதலில் நியமனமும் வழங்கியும் பார்வையில் காணும் அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. 

மேற்காணும் அரசாணையில் பதவி உயர்வு / பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்ட கீழ்க்காணும் தலைமையாசிரியர்களுக்கு அவர்களது பெயர்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்தில் நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது . இப்பணியிடத்தில் உடன் பணியேற்கும்படி அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed