Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 17, 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி திடீரென அறிவிக்கப்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு திடீரென அறிவிக்கப்பட்டதா? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் பொதுத் தேர்வு அட்டவணையை ஏற்கனவே தயாராக வைத்து இருந்தோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்

மேலும் தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து முதல்வரிடம் வரும் 21ம் தேதி ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கேள்வி ஒன்றுக்கு செங்கோட்டையன் பதிலளித்தார்

சற்றுமுன் அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 தேர்வின் முழு அட்டவணை இதோ:

மே 3ம் தேதி - மொழிப்பாடம்

மே 5ம் தேதி - ஆங்கிலத் தேர்வு

மே 7ம் தேதி - கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல்,

மே 11ம் தேதி - இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல்

மே 19ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு

மே 21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

No comments:

Post a Comment