Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 2, 2021

ஓய்வு வயது 60 ஆக உயருகிறது ?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ல் இருந்து 59 ஆக உயர்த்தி , கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் 25 ஆயிரம் பேருக்கு மேலும் ஓராண்டு அரசுப்பணியில் தொடர வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் வரவேற்ற வேளையில் , சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன இதற்கிடையில் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து , முதல்வர் நேற்று திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் , நிதித்துறை செயலர் கிருஷ்ணன் , பணியாளர் நிர்வாகத்துறை செயலர் ஸ்வர்ணா , முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். சட்டசபை தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment