Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 10, 2021

6,7,8-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 50% குறைப்பு..! விரைவில் பள்ளி திறப்பு

6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டது என சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், 6,7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்காகப் பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment