Saturday, February 6, 2021

8ஆம் வகுப்பு தகுதியில் அரசு செவிலி உதவியாளா் பணி.. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.8 !

சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் புழல் பெண்கள் தனிச்சிறையில், பெண் செவிலி உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடத்தை நிரப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், புழல் பெண்கள் தனிச்சிறையில் செவிலி உதவியாளர் பணியிடத்திற்கு, 8ஆம் வகுப்பு தோச்சி பெற்ற எஸ்.சி வகுப்பைச் சோந்த 35 வயதுக்கு உட்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி உடையவர்கள் சிறைக் கண்காணிப்பாளா், பெண்கள் தனிச்சிறை, புழல், சென்னை - 66 என்ற முகவரிக்கு, நாளை மறுநாளுக்குள் (பிப்.8) விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Murugaraj
    16/4தெற்கு தெரு
    பள்ளமடை

    ReplyDelete