Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 25, 2021

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று தகவல் பரவியது. இதனிடையே இதற்கு பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்க அறிக்கையில், ''9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். 9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் பள்ளிகள் வழங்கம்போல் செயல்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment