Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 5, 2021

9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - பெற்றோர் இசைவு கடிதங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி- அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு தொடங்க அனுமதித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றவும் பெற்றோர் இசைவு கடிதங்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



அரசாணைகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது . மேலும் பார்வை 2 ல் உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் பார்வை 3 -ல் உள்ள அரசாணையில் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் 9 மற்றும் 11 வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் 8.02.2021 முதல் செயல்பட , பார்வையில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட் -19 தொடர்பான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் , இணைப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை பெற்றிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

DGE - Consent Form And Instructions - Download here...

No comments:

Post a Comment