JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, March 11, 2021

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ. 35,000 சம்பளத்தில் அரசு வேலை

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளில் சேர விரும்புவோர், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படித்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..

காலியிட விவரங்கள் : தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்.எம்.டி.சி) கள உதவியாளர், பராமரிப்பு உதவியாளர் உட்பட 304 பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

தகுதி : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐயும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் : ரூ .18100-ரூ. 35040.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் : மார்ச் 11, 2021 முதல் ஏப்ரல் 20, 2021

வயது வரம்பு : இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு, நீங்கள் அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.nmdc.co.in/

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ. 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment