Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 13, 2021

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத்தேர்வு வரும் ஏப்.16-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இது தொடா்பாக அரசுத் தேர்வு இயக்ககம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை வரும் ஏப்.16-ஆம் தேதி முதல் ஏப்.23-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

ஏப்.8-ஆம் தேதி முதல் அரசுத் தேர்வுகள் இயக்க இணையதளத்தில் வெற்று மதிப்பெண் தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு மதிப்பெண்கள் ஏப்.28-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment