Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 25, 2021

பிளஸ் 2 மாணவர்களுக்கான 2ம் பருவத்தேர்வு 29ல் துவக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு, வரும், 29ல் துவங்கி, ஏப்., 1ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில், பருவத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இரண்டாம் பருவத்தேர்வு, வரும், 29ல் துவங்குகிறது. இதற்காக, மாவட்ட பொதுத்தேர்வுக் குழு தயாரிப்பின் வினாத்தாள்கள், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே, முதல் பருவத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், குறைக்கப்பட்ட பாடப்பகுதியின் முதல் பாதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், வரும், 29ல், கணிதம், தாவரவியல், பொருளாதாரம், ஆங்கிலம்; 30ல், இயற்பியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, அரசியல் அறிவியல்; 31ல், உயிரியல், விலங்கியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, டெக்டைல்ஸ் டெக்னாலஜி மற்றும் தமிழ்; ஏப்., 1ல், வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் தேர்வுகள் நடத்தப்படும். 

இத்தேர்வு, காலை, 11:45 முதல், 12:45 மணி வரையும், மதியம், 3:00 முதல், 4:30 மணி வரை நடக்கிறது. தேர்வு இல்லாத வேளைகளில், திருப்புதல் வகுப்புகள் நடத்தவும், குறைக்கப்பட்ட பாடப்பகுதியின் இரண்டாம் பாதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு நடத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment