Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 4, 2021

தேசிய பாதுகாப்பு வாரம்: இந்தியாவின் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றிய குறிப்புக்கள்!

தேசிய பாதுகாப்பு வாரம் இன்று (மார்ச்.4) தொடங்கி மார்ச் 10ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் பல துறைகள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல விஷயங்களை இந்த செய்தித்தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுகளின்படி, 2019ம் ஆண்டில் சுமார் 4,67,171 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கியதால், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதேபோல கடந்த ஆண்டு சாலை விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளும் குறைந்தது. இருப்பினும், இந்த வருடம் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் அன்றாட பணிகளுக்கு வெளியே வருவது வழக்கமாகி விட்டது.

ஒருவர் வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், வாகனங்களுக்கு இடையிலான தூரம் மிகக்குறைவாக இருக்கும் போதும் மற்றும் சுகாதார பிரச்சினைகள் காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதவிர செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், சோர்வு, ஓட்டுநர்கள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாகப் பயன்படுத்தாத போது, மற்றொரு வாகனத்தை முந்தும் போது விபத்துகள் நிகழ்கின்றன. சாலைகளின் நிலைமைகள் கூட சில நேரங்களில் விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. இது போன்ற விபத்துக்களை தடுக்க தேசிய பாதுகாப்பு வாரத்தின் முதல் நாளான இன்று, நமது நாட்டில் உள்ள பாதுகாப்பு விதிகளை பற்றி நன்கு தெரிந்துக்கொள்வோம்.

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்:

ஒரு வாகனத்தில் பயணிப்பவர்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு மாநிலத்தின் அரசு போக்குவரத்துத் துறைகளாலும் பல விதிகள் இயற்றப்பட்டுள்ளன. அதன்படி, சில முக்கிய போக்குவரத்து விதிகள் பற்றி கீழே காண்போம்.

1. வாகனம் ஓட்டும் போது இடதுபுறம் பயணித்தல்: வலதுபுறத்தில் இருந்து எதிர் பக்கத்தில் வரும் வாகனங்களைத் தவிர்ப்பதற்கு ஒருவர் எப்போதும் இடதுபுறமாக இருக்க வேண்டும். வாகனத்தையும் திருப்பும்போது இதை பராமரிக்க வேண்டும்.

2. வளைவுகள் மற்றும் குறுகிய சாலைகளில் கவனமாக ஓட்டுதல்: சாலை சந்திப்புகள் மற்றும் வளைவுகளில், ஒருவர் மெதுவாகச் செல்ல வேண்டும். அதே சமயம், வாகனங்களுக்கு இடையில் தெளிவான பாதையை உறுதி செய்யும் வரை காத்திருக்க வேண்டும். இதே விஷயங்களை பிரதான சாலைகளில் நுழையும்போது பின்பற்றவேண்டும்.

3. சிக்னல்கள், கை சைகைகள் மற்றும் ஒலிபெருக்கி: சாலைகளில் செல்லும் போது எந்த திசையை நோக்கி திரும்பினாலும் மெதுவாக செல்ல வேண்டும். அல்லது ஒரு வாகனத்தை கடந்து செல்ல முயற்சிக்கும் போது ஒருவர் கார் சிக்னல்களை பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் கை சைகைகளை செய்யலாம். சைலன்ஸ் சோன்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.

4. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள்: இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு ஐ.எஸ்.ஐ சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் அவசியமான ஒன்றாகும். அதேபோல கார்களில் பயணிப்பவர்கள் எப்போதும் சீட்பெட்டுகளை அணிய வேண்டும்.

5. மது அருந்திய பின் வாகனம் ஓட்டக்கூடாது: ஆல்கஹால் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே ஒருவர் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.

6. மொபைல் போன்கள்: வாகனம் ஓட்டும் போது, ஒருவர் தங்கள் முழு கவனத்தையும் முன்னோக்கி செல்லும் சாலையில் வைக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் அவை உங்கள் உயிருக்கு பங்கம் விளைவிக்கும்.

7. ஜீப்ரா கிராசிங்ஸ்: வெள்ளை மற்றும் கருப்பு கோடுகள் எனப்படும் ஜீப்ரா கிராசிங்ஸ் சாலைகளில் ஒரு முக்கிய காரணத்திற்காக அமைக்கப்பட்டுள்ளன. பாதசாரிகள் நடந்து செல்ல எதுவாக அவை போடப்பட்டிருக்கும். எனவே, வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து சிக்னல் தெளிவாக இருக்கும் போது சாலையைக் கடக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

8. உடல்நலப் பிரச்சினைகள்: நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் அல்லது சோர்வாக இருந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் வாகனம் ஓட்டும்போது நிதானம் மிகவும் அவசியம்.

9. போக்குவரத்து விளக்குகள்: போக்குவரத்து விளக்குகளை புறக்கணிக்காதீர்கள். சமிக்ஞை பச்சை நிறமாக இருக்கும்போது மட்டுமே வாகனத்தை ஓட்டவும் மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தால் வாகனத்தை சாலையில் செலுத்த வேண்டும்.

10. விலங்குகள் மீது மோதாமல் கவனமாக இருக்க வேண்டும்: சாலைகளில் கால்நடைகள், நாய்கள் மற்றும் பூனைகள் தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் தடுக்க கவனமாக ஓட்டுங்கள்.

No comments:

Post a Comment