நாளை முதல் நான்கு நாட்களுக்கு வங்கிகளின் வேலை நிறுத்தப் காரணத்தினால், வங்கிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் 15, 16 (திங்கள்,செவ்வாய்) ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நாளை வங்கிகளைப் பொறுத்த வரைக்கும் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை..
அதேபோல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை அதனைத் தொடர்ந்து 15 16 ஆகிய தேதிகளில் வங்கிகளின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதால், நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்பது தான்.
குறிப்பாக வங்கிகளில் டெபாசிட், செக்கியன்ஸ் போன்ற வங்கி பணிகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் முக்கிய தேவையான ஏடிஎம் சேவைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே சமயத்தில் தனியார் வங்கிகள் அனைத்தும் வழக்கம்போல வரும் 15, 16 (திங்கள்,செவ்வாய்) ஆகிய தேதிகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 12, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment