இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (என்.பி.சி.சி) சைட் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 05/2021
பணி: Site Inspector (Civil)
காலியிடங்கள்: 80
பணி: Site Inspector (Electrical)
காலியிடங்கள்: 40
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில், சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Sunday, March 28, 2021
தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலை
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment