Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 2, 2021

செய்முறை தேர்வெழுதாத 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ

கரோனா பாதித்ததால், செய்முறைத் தேர்வில் பங்கேற்காத 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11-ஆம் தேதிக்குள் மறு தேர்வு நடத்துமாறு சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்பட்டது. இதில், கடந்த மார்ச் மாதம் செய்முறைத் தேர்வின் போது தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ கரோனா பாதித்து, தேர்வில் பங்கேற்க முடியாத மாணவ, மாணவிகள் யாரேனும் இருப்பார்கள் என்றால், அவர்களுக்கு மட்டும் வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் பள்ளிகள் செய்முறை மறுதேர்வு நடத்தலாம் என்று சிபிஎஸ்இ தேர்வு கடுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே - ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment