வங்கி வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 150 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 150
நிர்வாகம்: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி
பணி: Generalist Officers
சம்பளம்: மாதம் ரூ.48,170 - ரூ.69,810
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA, ICWA, CFA, FRM இவற்றில் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவதொரு வங்கியில் 3 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.118 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Thursday, April 1, 2021
பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலை
வேலைவாய்ப்புச்செய்திகள்
Tags:
வேலைவாய்ப்புச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment