பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலன் சொல்லப்பட்டதில், தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக, பட்டாச்சாரியார்கள் கூறினர்.யுகாதி பண்டிகையையொட்டி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலனை தெரிவித்தனர்.
அதன் விபரம்:
புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும்; பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும்;
விவசாயிகள் ஏற்றம் பெறுவர்;
கடந்தாண்டை போன்று, நடப்பாண்டும் புதுப்புது, 'வைரஸ்'உருவாகும்; கால்நடைகளுக்கும் வியாதிகள்ஏற்படும்;
மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள்கிடைக்கும்.
கல்வி துறையில், உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும்;
அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும்; இந்தாண்டில், 12 புயல்கள் உருவாகும்.
இவற்றில் ஒன்பது, இந்தியாவை சுற்றி தாக்கும்; புயல் வெள்ளத்தால், சென்னை மிதக்கும்.
இப்படி கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்கூறினர்.
No comments:
Post a Comment