பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இயற்கையாகவே பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளது.
அதிலும் இரவில் தூங்குவதற்கு முன்னர் பூண்டை சாப்பிட்டால் பல நன்மைகள் ஏற்படும். இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும், ஒரு டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.
இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.
சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம்.
பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு:
பூண்டு சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
No comments:
Post a Comment