டிஜிட்டல் காலமாக மாறிக்கொண்டு வந்தாலும் பெரும்பாலானோர் பிஎஃப் பணத்தை எடுக்க அலுவலகத்திற்கு நடந்து நடந்து சென்று ஓடாய் தேய்ந்து வருகின்றனர். ஆனால், இந்த நிலை ஏற்படக்கூடாது என எளிமைப்படுத்தப்பட்டு மொபைல் போன் மற்றும் ஆன்லைன் மூலமாகவே பிஎஃப் பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது சந்தாதாரர்களை சில நிபந்தனைகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. பலருக்கு தங்களது பிஎஃப் பணத்தை எப்படி எடுப்பது என்று தெரியாமல் இருக்கும். பிஎஃப் பணத்தை எடுக்க அதிகம் செலவு செய்பவர்களும் உண்டு. பிஎஃப் பணத்தை மிக எளிதாக நீங்களே எடுக்கலாம்.
பிஎஃப் பணத்தை எப்படி எளிதாக எடுக்காலம் என்று பார்க்கலாம்:-
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையதளம் மூலம் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
EPFO போர்ட்டலில் உள்நுழைந்ததும், "online services" பிரிவின் கீழ் "claim" என்ற வசதியில் "verify" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
உரிமை கோரல் படிவத்தைக் கொண்ட அடுத்த பக்கத்தில், உங்களது பிஎஃப் கணக்கில் கடைசி நான்கு இலக்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் "proceed for online claim" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் (படிவம் 31), திரும்பப் பெறுவதற்கான நோக்கம் மற்றும் விரும்பிய தொகை போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். இந்த கட்டத்தில் நீங்கள் முழு, பகுதி அல்லது ஓய்வூதியம் என்ற வகையில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படிவம் 31 அல்லது "PF advance" படிவத்தில் கீழ் தோன்றும் மெனுவில் "I want to apply for" விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துத் தொடர வேண்டும். பின்னர் "outbreak of pandemic (Covid-19)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பின்னர் "get Aadhaar OTP" என்ற வசதியை கிளிக் செய்து உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைக் கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்கவும்.
உங்களது கோரிக்கை நிறுவனத்தின் ஒப்புதலுக்காக முதலில் அனுப்பப்படும். அதன் பின்னர் தகுதியான தொகை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கில் இரண்டு வாரங்களுக்குள் வரவு வைக்கப்படும்.
No comments:
Post a Comment