முழு ஊரடங்கு தமிழகத்தில் வரும் திங்கள் மே 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்துகொள்ள இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் இரவு 9 மணி வரை இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கின் போது மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் தவிர பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை.
தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம். உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment