Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 26, 2021

2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு!


முதன்மை செயலர் / ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை அவர்களின் கட்செவி செய்தியில் , அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களால் IFHRMS செயலியில் சமர்பிக்கப்படும் மே -2021 மாத ஊதியப் பட்டியல்களை ( HARD COPY ) நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க இயலாத நிலையில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ஊரடங்கு காலம் முடிவுற்ற பின் பட்டியல்களை நேரடியாக கருவூலத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் , பணம் பெற்ற வழங்கும் அலுவலர்கள் பட்டியல்களை மென்பொருள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பிய பிறகு , மென்பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு கருவூல பணியாளர்கள் அவ்வூதியபட்டியல்களை ஏற்பளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . 

அதனைத் தொடர்ந்து , திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் மேற்கண்டவாறு பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யபப்டும் பட்சத்தில் , உதவி கருவூல அலுவலர்கள் தங்களுக்குட்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இணைப்பில் கண்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலரின் கையொப்பத்துடன் ( Signed and Scanned Copy ) சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு தெரிவித்து , பெறப்படும் விவரங்களை பட்டியல்களுடன் ஒப்பிட்டு பட்டியல்களை ஏற்பளிக்க தொடர்புடைய பிரிவு கணக்கர்கள் / கண்காணிப்பாளர்கள் / கூடுதல் கருவூல அலுவலர் / உதவி கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment