Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 26, 2021

ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்தில் முதல் அலை கொரோனா பாதிப்பின் போது , தடுப்பூசி இன்றி உயிர்பலி ஏற்பட்டு வந்தது . தற்போது 2வது அலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு , அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதனால் நோய் குறைந்து வருகிறது . இதற்கிடையே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் , அலுவலர்களில் தடுப்பூசி போடாதவர்கள் , அருகே உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தினை பள்ளிக்கல்வித்துறை மூலம் இணையதளத்தில் உள்ள கோவிட்-19 ஷீட்டில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணை தடுப்பூசியா ? 2 வது தவணை தடுப்பூசியா ? எத்தனை தடுப்பூசி என்று பதிவிட வேண்டும். இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து , தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment