Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 19, 2021

இவர்களுக்கு எல்லாம் இ-பதிவு கட்டாயம் இல்லை!

ஊடகவியலாளர்கள், மருத்துவத்துறையினர், வழக்கறிஞர்களுக்கு இ-பதிவுமுறை அவசியமில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்ட விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது.

மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயணம் செய்ய இ-பதிவு செய்ய வேண்டும்.

மேலும் , பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ - பதிவு செய்து , இ - பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் .

இதனிடையே சென்னைக்கு உள்ளே பயணிக்கவும் இ-பதிவு கட்டாயம் என காவல்துறையினர் அதிரடி உத்தரவி பிறப்பித்தனர். இந்நிலையில் அதில் விலக்கு அளிக்கும் விதமாக, ஊடகத்துறையினர், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோருக்கு இ-பதிவு அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊடகத்துறையினர்,அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment