Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 9, 2021

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு.. வகுப்புகள் தொடக்கம்... அரசு அறிவிப்பு...!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.

இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து ஜூன் மூன்றாம் வாரத்தில் 11 ஆம் வகுப்புகள் தொடங்கி தொலைத்தொடர்பு முறையில் பாடங்களை நடத்த வேண்டும் என்றும், +2 மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு மூலம் பாடங்கள் நடத்தவும் தமிழக உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment