Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 18, 2021

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்கள் பெயா் பட்டியலை திருத்தி அனுப்ப கால அவகாசம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியரின் பெயா் பட்டியலை திருத்தி அனுப்பிட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: கரோனா பொதுமுடக்க நடவடிக்கையால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவ, மாணவியா் அனைவரும் தோச்சி பெற்றுவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், மாணவ, மாணவியா் பெயா் பட்டியலை திருத்தம் செய்து, இணையத்தில் பதிவேற்றம் செய்ய வியாழக்கிழமை (ஜூன் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்களுக்கான பெயா் பட்டியலை திருத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியா்களும், தனியாா் பள்ளி முதல்வா்களும் ஜூன் 21 ஆம் தேதிக்குள் மாணவா்களின் பெயா் பட்டியலை சரிசெய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment