இந்தியா முழுவதுமே தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஐ.சி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. 10ம் வகுப்பு தேர்வுகளை ஏற்கெனவே ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று, சிபிஎஸ்.இ. மற்றும் சி.ஐ.எஸ்.சி.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
பிரதமர் மோடி நேற்று மாலை 12ம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், அந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
இப்போது ஐ.சி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment