தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ”மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு தான். ஆனாலும் அந்த ஒருநாள் மூலம் மாணவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம்” என்றார்.
No comments:
Post a Comment