Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 1, 2021

பன்முக கலைஞர் விருது: பல்லடம் மாணவியர் தேர்வு

பல்லடம் பகுதியை சேர்ந்த மாணவியர் இருவர், பன்முக கலைஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை பசுமை வாசல் பவுண்டேஷன், ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட், மற்றும் பல்லடம் காருண்யம் டிரஸ்ட் ஆகிய வற்றின் சார்பில், பன்முக கலைஞர்களுக்கான விருதுக்கான தேர்வு நிகழ்ச்சி நடந்தது.

கவிதை, கட்டுரை, இலக்கியம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதில், மாநிலம் முழுவதும் இருந்து, 900க்கும் மேற்பட்ட கவிஞர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 

அதில், பல்லடம் - வடுகபாளையத்தை சேர்ந்த மாணவியர் இருவர், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், ஏழாம் வகுப்பு மாணவி சஹானா, 12, மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் அசிம்மா, 13 ஆகிய இருவரும், இளம் படைப்பாளர்கள் பிரிவில் வெற்றி பெற்று, 'கலைஞரின் மணிமகுடம்,' விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

No comments:

Post a Comment