Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 22, 2021

பள்ளிகளை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை - பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்கள் குறித்த அட்டவணையை அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 28-ஆம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை, நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது .கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம், கல்வி தொலைக்காட்சியில் வீடியோக்கள் மூலம் கல்வி கற்கும் முறை என அனைத்தும் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரியபடுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறக்க இப்போதைக்கு வாய்ப்பில்லாததால் கல்வி டிவி மூலமாக பாடங்களை கற்பிக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்களின் அட்டவணையை மாணவர்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி டிவி மூலம் கற்றல் கற்பித்தல் பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த விழிப்புணர்வு புரிதலை மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment