Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 8, 2021

மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.. வெளியானது அதிரடி அறிவிப்பு!

கொரோனாவில் பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் சி.ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது பட்டய படப்புக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு கட்டணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் பயிற்சி மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

No comments:

Post a Comment