Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 9, 2021

தொகுப்பூதிய பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தொகுப்பூதியத்தில் பணியாற்றி 2006ல் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் அந்த தேதி முதற்கொண்டு தான் அடுத்த பதவி உயர்வுக்கான தகுதி வாய்ந்தோர் பட்டியலில் அவர்கள் இடம் பெறுவர்.

அரசாங்கம் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் ஏற்கனவே இருந்த விதிமுறைகளின் Rules படி அல்லாமல் adhoc அடிப்படையில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இளநிலை ஆசிரியர்களாக பணியமர்த்த சில நிபந்தனைகள விதித்து அதனை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கையொப்பமிட்டு பணியமர்த்தப்பட்டதாலும் மேலும் இந்த நிகழ்வுகள் நடந்து 14 ஆண்டுகளுக்கும் மேல் காலம் கடந்து விட்டபடியாலும் அரசுக்கு உள்ள நிதி நெருக்கடி போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் கொள்கை முடிவு என்பதால் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய இளநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையான பணியில் சேர்ந்து பணிவரன்முறை செய்யப்பட்ட நாளின் அடிப்படையிலேயே பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்குகள் மற்றும் மேல் முறையீட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.நன்றி.

No comments:

Post a Comment