தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அனைத்து கல்வியியல் கல்லூரிகளிலும் m.ed படிக்கும் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் செய்முறை தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களை மட்டுமே செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மதிப்பெண் விகிதம் 90 சதவீதத்திற்கும் மேல் இருந்தால், மறு செய்முறை தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment