JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
"தமிழகத்தில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று சந்தித்தேன்.
அப்போது அவரிடம், 'ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை. எனவே, தமிழகத்தில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர், '9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் உறுதியளித்தார்" என்று கூறினார்.
No comments:
Post a Comment