Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 22, 2021

எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. 

இந்த நிலையில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து அரசு விரைவில் முடிவு எடுப்போம் என்று கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

மூன்றாவது அலை மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டவுடன் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment