Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 5, 2021

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Play Schools இருப்பது கட்டாயம் - NEP நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம்.

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பிளே ஸ்கூல் இருப்பது கட்டாயம் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தொழிற்கல்விக்கு ( தொழிற்கல்வி, Coding, Augmented & Virtual Reality ) முக்கியத்துவம் தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், மாநிலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதன் மூலாம் புதிய கல்விக் கொள்கை ( NEP )அம்சங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது.

No comments:

Post a Comment