Breaking

Tuesday, October 12, 2021

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகளும் , 99 நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகிறது. இதில் 2020-2021 - ம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளியில் 33,736 மாணவ / மாணவியர்களும் , நடுநிலைப்பள்ளியில் 8,147 மாணவ / மாணவியர்களும் கல்வி பயின்றுள்ளனர். மேலும் , தொடர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

இத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படவும் , இம்மாணவர்கள் தரமான கல்வியின்மூலம் உயர்கல்வியினை பயிலவும் , இதனால் இத்துறையில் கல்வி பயிலும் மாணவ / மாணவியர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் , தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ / மாணவிகளின் கற்றல் திறனில் மேம்பாடு அடைய இத்துறையில் பல்வேறு முன்னேற்ற நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக , இணைய தளத்தில் “ BumbieB " அறக்கட்டளை மூலமாக தமிழ்வழிக் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவசமான , விளம்பரம் இல்லாத கற்றலை எளிமையாக்கும் " கல்வி 40 ” என்ற செயலி வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள , இச்செயலியை பயன்படுத்தலாம் என்று கருதப்படுகிறது .

இச்செயலியில் 3 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடங்களையும் ஒளி ஒலி வடிவில் குறும்பட்ங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி பாடங்கள் மட்டும் அல்லாமல் , போட்டிகள் , பயிற்சி தேர்வுகள் , போட்டி தேர்வுகள் , விடுகதைகள் மற்றும் கதைகள் போன்றவைகளும் உள்ளன. இச்செயலியில் படங்கள் மூலமாகவும் , ஒளி ஒலி மூலமாகவும் , ஒவ்வொரு பாடங்களையும் விரிவாகவும் , விளக்கமாகவும் போதிப்பதால் , மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் உள்ளது.

மேலும் , ஓராசிரியர் மட்டும் பணிபுரியும் பள்ளிகளில் இதுபோன்ற செயலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இச்செயலியை கைபேசியில் உள்ள Play store app- ல் “ கல்வி 40 ” என்று தட்டச்சு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இச்செயலியில் செயல்படுத்தப்படும் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகள் மாணவர்களை சென்றடையும் பொருட்டு ஒவ்வொரு பள்ளியிலும் " கல்வி 40 ” செயலி பதிவிறக்கம் செய்தும் , அதன் வழியே மாணவ / மாணவிகளுக்கு இணைய வழிக்கல்வி பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு , மாவட்டங்களில் இயங்கிவரும் 833 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 99 நடுநிலைப்பள்ளிகளையும் தனித்தனியாக ஒருங்கிணைத்து பயிற்சிகள் வழங்கிடவும் , அவை மாணவ / மாணவிகளுக்கு சென்றடையும் வகையில் மாநில அளவில் கீழ்க்கண்டுள்ளவாறு வரிசை எண் .2 முதல் 3 வரையுள்ள அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறது.

வரிசை எண் .4 - ல் உள்ள ஒருங்கிணைப்பாளர்களை அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் நியமனம் செய்யுமாறும் , கீழ்க்கண்டுள்ளவாறு “ Whatsapp ' குழு ஆரம்பித்து அதன் விவரத்தை 20.10.2021 - க்குள் ஆணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" Whatsapp ” குழு விவரம் :







No comments:

Post a Comment