Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 22, 2022

TRB மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப ஜூன் 2022 இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது.

மேலும் 3902 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 4989 பணியிடங்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் எனவும் தெரிகிறது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்புகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டட சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 வரைவாளர் பணியிடங்களுக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.

பொறியியல் கல்லூரிகளில் 104 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். ஆசிரியர் பணியின் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த தேர்வு கால அட்டவணை பயனுள்ளதாக இருக்கும். தேர்வர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்து விண்ணப்பிக்கவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment