2010-11 ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட 135 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!
ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 625 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன . மேலும் , ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 10 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 50 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
Wednesday, March 16, 2022
675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment